×

பாஜவில் சேராவிட்டால் சிறையில் அடைத்து விடுவார்கள் என்று கதறி அழுதார் ஷிண்டே: ஆதித்ய தாக்கரே விமர்சனம்

மும்பை: பாஜவில் சேராவிட்டால் என்னை புலனாய்வு ஏஜென்சிகள் கைது செய்து சிறையில் அடைத்துவிடும் என்று கூறி ஏக்நாத் ஷிண்டே கதறி அழுததாக முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்ரே விமர்சித்துள்ளார். விசாகப்பட்டினம் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டார். அப்போது பேசிய ஆதித்ய தாக்கரே, ‘‘40 எம்எல்ஏக்கள் பணத்துக்காக சேனா தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர்.

தற்போதுள்ள முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எங்களது வீட்டிற்கு வந்து புலனாய்வு ஏஜென்சிகளால் கைது செய்யப்பட போவதாக கூறி கதறி அழுதார். நான் பாஜவிற்கு செல்ல வேண்டும் இல்லையென்றால் என்னை கைது செய்து விடுவார்கள் என்று கூறினார். இவரை உண்மையான சிவசேனா என காட்டுவதற்கு பாஜ விரும்பியது இவரது அதிர்ஷ்டம்” என்றார்.

The post பாஜவில் சேராவிட்டால் சிறையில் அடைத்து விடுவார்கள் என்று கதறி அழுதார் ஷிண்டே: ஆதித்ய தாக்கரே விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Shinde ,Baja ,Mumbai ,Eknath Shinde Kathalam ,
× RELATED காங்கிரசில் சேர்ந்து சாவதை விட...